சென்னை: மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும். 100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த பின் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி அளித்தார். திருக்கோவிலூர் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து இதுவரை தகவல் இல்லை எனவும் தெரிவித்தார்.