Thursday, May 30, 2024
Home » சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 44 புறநகர் ரயில்கள் ரத்து!..

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 44 புறநகர் ரயில்கள் ரத்து!..

by Ranjith

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே 44 புறநகர் ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டது. மார்ச் 3-ல் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, நண்பகல் 12, 12,10, 12.20, 12.40, 12.50, 1, 1.15, 1.30, 2, 2.15, 2.30 மணி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 11, 11.50, மதியம் 12.30, 12.50, 1.45, 2.15 மணி, சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல், மறுமார்க்கத்தில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே காலை 10.05, 10.15, 10.25, 10.45, 10.55, 11.05, 11.25, 11.35, நண்பகல் 12.15, 12.45, மதியம் 1.30, 1.45, 2.15, மாலை 4.30 மணி, செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே காலை 9.40, 10.55, 11.30, நண்பகல் 12, மதியம் 1 மணி, காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9.30 மணி, திருமால்பூர்-சென்னை கடற்கரை இடையே காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவைகளும் நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.

தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக நாளை தாம்பரம்-செங்கல்பட்டு இடையே காலை 11.55, மதியம் 12.45, மதியம் 1.25, 1.45, 1.55, 2.40, 2.55 மணிக்கும், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே காலை 9.40, 10.55, 11.05, 11.30, நண்பகல் 12, மதியம் 1 மணிக்கும், காஞ்சிபுரம்-தாம்பரம் இடையே காலை 9.30, திருமால்பூர்-தாம்பரம் இடையே நண்பகல் 12 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

மேலும், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்து சேவைகளை கூடுதலாக இயக்குமாறு சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 4-வது வாரமாக தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

5 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi