நெமிலி: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே காட்டுக்கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சபீனா(20). இவர் பிளஸ்2 முடித்துவிட்டு சென்னை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கும் அவரது உறவினரான நெமிலி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 29ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், கடந்த 27ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அவர், ‘வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை என தோழிகளுக்கு பிடிக்கவில்லை. இதனால் எனக்கும் அவரை பிடிக்கவில்லை,’ என கூறி பாதுகாப்பு கேட்டு அரக்கோணம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். பின்னர் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட சபீனா, பெற்றோரிடம் செல்ல விரும்பியதால் அவரை காப்பகத்திலிருந்து வீட்டுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டின் எதிரே உள்ள கூரை வீட்டில் தூக்கிட்டு சபீனா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.