இடைப்பாடி: சேலம் மாவட்டம், இடைப்பாடி வெள்ளாண்டிவலசை சேர்ந்தவர் செந்தில்குமார்(33). பேக்கரி ஊழியர். இவருக்கும் சுதா(27) என்பவருக்கும், நேற்று முன்தினம் (16ந்தேதி), சின்னேரிக்காடு அருகேயுள்ள முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் செந்தில்குமார் வீட்டிற்கு சென்ற நிலையில், மறுநாள் (17ம் தேதி) மாலை சுதாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே சுதா மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார்.