திருப்பூர்: ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய கல்வி அதிகாரியாக இருப்பவர் ஸ்ரீதேவி. இவர், கடந்த 2006ல் திருப்பூர் காதர் பேட்டை பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்துள்ளார். பின்னர், 2016ல் பதவி உயர்வு பெற்று கல்வி அதிகாரியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் 10 ஆண்டுக்கான பணி வரன்முறை ஆணையை திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) அமுதாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அமுதா ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஸ்ரீதேவி, திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், ஸ்ரீதேவியிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தனர். அந்தப் பணத்தை அவர் நேற்று அமுதாவிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அமுதாவை கைது செய்தனர்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம் கல்வி அதிகாரி கைது
previous post