பிரேசிலியா: பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோ கொரோனா தடுப்பூசி ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ரியோ டி ஜெனிரோவில் அவருக்கு சொந்தமான 16 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், போல்சனரோவுக்கு நெருக்கமானவரான மவுரோ சிட் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் போல்சனரோ வீட்டை சோதனையிட்ட போலீசார் அவரது செல்போனை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.