Thursday, May 16, 2024
Home » விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

by Arun Kumar

வேலூர்: விபத்தில் சிக்கிய சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஆர்மாமலை கொல்லக்கொட்டாயை சேர்ந்தவர் சவுந்தரராஜன். விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு நித்யா, வெங்கடேஸ்வரன்(16) மற்றும் சந்தோஷ்(13) என மூன்று பிள்ளைகள்.

இதில் சந்தோஷ் அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தான்.ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சந்தோஷ் மேல்சிகிச்சைக்காக அன்று இரவு 8 மணியளவில் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று இரவு 10.15 மணியளவில் சந்தோஷூக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சந்தோஷின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோர் முன்வந்தனர். இதைத்தொடர்ந்து அவரது இதயம் மற்றும் அவரது இரண்டு நுரையீரல்களும் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், ராணிப்பேட்டை சிஎம்சி வளாகத்துக்கு ஒரு சிறுநீரகமும், கல்லீரலும், கண்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் ராணிப்பேட்டை சிஎம்சி, சென்னை அப்பல்லோ, எம்ஜிஎம் மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டிய உடல் உறுப்புகள் இன்று காலை உரிய பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

You may also like

Leave a Comment

nineteen − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi