சென்னை: சென்னை மாதவரம் கொசப்பூர் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் விழுந்த 19 வயது சிறுவன் மயமாகியுள்ளான். டான் பாஸ்கோ சீர்திருத்த பள்ளியில் தங்கியிருந்த ஆதரவற்ற சிறுவன் சந்தோஷை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. கால்வாயில் விழுந்ததில் காணாமல்போன சிறுவன் சந்தோஷை, 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். நண்பர்களுடன் அமர்ந்திருந்த சந்தோஷ், வழுக்கி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.