ராமநாதபுரம்: பாம்பனில் இருந்து வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில் 10 மீனவர்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்த படகு மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடி படகின் ஹல் பகுதியில் ஏற்பட்ட சேதத்தால் படகில் பெருமளவு நீர் புகுந்து இயந்திரம் செயலிழந்தது. நடுக்கடலில் தத்தளித்த 10 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகை கடலோர காவல்படையினர் மீட்டனர்.