தேனி: போடியில் 2வது நாளாக ஏலக்காய் ஏலத்தை வியாபாரிகள் புறக்கணித்துள்ளனர். மத்திய அரசின் நறுமணப் பொருட்கள் வாரியத்தில் நடக்க இருந்த ஏலக்காய் ஏலத்தை வியாபாரிகள் புறக்கணித்தனர். ஏலக்காய் கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.