Sunday, June 16, 2024
Home » வாரியம் கேட்டு அடம்பிடிக்கும் தாமரை கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

வாரியம் கேட்டு அடம்பிடிக்கும் தாமரை கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Ranjith

‘‘வாரிய பிரச்னை பெரிய பிரச்னையா இருக்கும் போலிருக்கே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரிக்கு வந்த மேலிடப்பொறுப்பாளர் சுரனா, புதிதாக நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பூத் கமிட்டியை பலப்படுத்தும் வேலையில் உடனடியாக இறங்க வேண்டும். மேலும் நிரப்பாமல் இருக்கும் தொகுதி தலைவர், பல்வேறு பிரிவுகள், அணித்தலைவர்கள் பதவிகளையும் விரைவில் நிரப்புவோம் என கூட்டத்தில் தெரிவித்தார். எனவே உற்சாகமாக பணியாற்றுங்கள். புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜதான் போட்டியிடுகிறது என உறுதிப்பட தெரிவித்தாராம்.

இது ஒரு பக்கம் இருக்க, காங்கிரஸ் கட்சியில் இருந்து, தாமரைக்கு மூத்த தலைவர்கள் வந்தபோது, அவர்களுடன் இரண்டாம் கட்ட தலைவர்களும் கட்சியை விட்டு வெளியே வந்தார்களாம். தேர்தலில் பம்பரமாக சுழன்று பணியாற்றி தாமரைக்கு வெற்றியும் தேடி தந்தனராம். ஆனால் ஆட்சிக்கு வந்தபின், அவர்களை கண்டு கொள்ளவில்லையாம். வாரியம் தருவோம் என நாக்கில் தேன் தடவி விட்டு தற்போது கண்டு கொள்ளாததால் எல்லோரும் விரக்தியில் இருக்கிறார்களாம். தேர்தல் நெருங்கி வருகிற நேரத்தில், இந்த கோரிக்கை மீண்டும் வலுப்பெற துவங்கியுள்ளதாம். புதிய நிர்வாகிகள் மட்டும் தேர்தல் வேலை பார்க்கட்டும்.

நாம் ஏன்? வேலை பார்க்க வேண்டும் என இரண்டாம் கட்ட தலைவர்கள் புலம்புகிறார்களாம். இதனை உணர்ந்து மேலிடப்பொறுப்பாளர் சுரானாவும், புல்லட்சாமியிடம் வாரியத்தை நிரப்புங்கள் என பலமுறை கூறியும், புல்லட்சாமி கண்டு கொள்ளவில்லையாம். தற்போதைய சூழலில் வாரியத்தை நிரப்பாவிட்டால், இரண்டாம் கட்ட தலைவர்கள் காலை வாரி விடுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கிறதாம் தாமரை. எனவே புல்லட்சாமியிடம் வாரிய தலைவர் கேட்டு பாஜ நெருக்கடி கொடுத்து வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முக்கிய பிரமுகர்களை அழைத்தால் எல்லோரும் வர தயங்குகிறார்களாமே.. காரணம் என்ன..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாவட்டத்துல தாமரை லீடரின் நடைபயணம், நீண்ட ெநடிய இழுபறிக்கு பிறகு ஒரு வழியாக உறுதி செய்யப்பட்டிருக்காம். அதாவது, நாளை ஊரகப்பகுதியில் இருந்து பயணத்தை தொடங்குறாராம் பிரதர் மவுண்டன் லீடரு. ஏற்கனவே இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளுக்கு நிர்வாகிகள் வசூலில் ஈடுபட்டதும், அதனால் தொழிலதிபர்கள் சிலர் ஓட்டம் பிடித்ததும் ஊரறிஞ்ச கதை. இலைகட்சி நிர்வாகிகளுக்கு தூண்டில் போட்டு, லீடரு முன்னிலையில் தாமரையில் சேர்க்க முயற்சிகள் நடந்தது. அதுவும் ஒர்க்அவுட் ஆகவில்லை.

இப்படி பல டெக்னிக்குகள் பெரிசாக கை கொடுக்காத நிலையில், மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்கள் சந்திப்புக்கு இப்போது அரேஞ்ச் பண்ணிக்கிட்டு இருக்காங்களாம். அதிலும் முக்கியமாக பல்வேறு கம்யூனிட்டிகளின் தலைவர்கள் என்ற பெயரில், ஒரு லிஸ்ட் தயாராகி இருக்காம். அவர்களை எல்லாம் பிரதர் மவுண்டன் லீடரு மீட் பண்ணி பேசப்போறாராம். இதிலும் பலர் பிடி கொடுக்காமல் நழுவி இருப்பது, தாமரை நிர்வாகிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்காம். இதில் கம்யூனிட்டி லீடர்கள் என்ற பட்டியலில் இருப்பவர்களில், பெரும்பாலானவர்கள் பிசினஸ்மேன்களாகவும் இருப்பவர்களாம். எனவே, இந்த மீட்டால் பாக்கெட்டில் இருப்பது பறிபோய் விடுமோ என்ற பயமும், லீடர் மீட்டை தவிர்ப்பதற்கு ஒரு காரணமாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘போனையை எடுக்குறது இல்லையாமே அந்த இலை மாஜி..’’ என்று அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியோட மாஜி அமைச்சர் தற்போது சேலத்துக்காரரு அணியில இருக்குறாரு.. சமீபகாலமாக கட்சியோட முக்கிய நிர்வாகிகளோட இந்த மாஜி ‘டிஸ்டன்ஸை மெயின்டன் பண்ணுறாராம்… இது கட்சியோட தலைமைக்கு பிடிக்கலையாம்… நிலைமை இப்படியிருக்க ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கட்சிக்காரங்க முக்கிய நிர்வாகிகளுக்கு நேரில் அல்லது போனில் வாழ்த்து தெரிவிச்சு வர்றாங்களாம்…

அப்படி தொண்டர்கள் சிலர், இந்த மணியான மாஜியை செல்போனில் அழைச்சாங்களாம்.. ஆனா அவரு எந்த அழைப்பையுமே எடுக்கவே இல்லயாம்… இதனால் கட்சி தொண்டர்கள் புலம்பி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ரெண்டு ஸ்டார் காக்கி காட்டுல பண மழைன்றாங்களே.. உண்மை தானா..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டம் ஆறு அணி நகரத்துல தாலுகா காக்கிகள் நிலையம் இருக்குது. இங்க 2 ஸ்டார் காக்கியாக ஒருத்தர் பணிபுரிஞ்சு வர்றாரு. இவரு டிரான்ஸ்பர் ஆனாலும் ஆறு அணி சப்டிவிஷனுக்குள்ளவேதான் பதினாலு வருஷமாக பணிபுரிஞ்சு வர்றாராம்.

இதனால இவருக்கு அந்த சப்-டிவிஷனே அத்துபடியாம். எங்க யார்கிட்ட வாங்கணும்னு எல்லாமே தெரிஞ்சு வெச்சிருக்காராம். இதற்கிடையிலத்தான், புதுசா ஒரு 3 ஸ்டார் காக்கி பொறுப்பேற்றாராம். அவரு எல்லா சட்டவிரோத செயல்களையும் கட்டுப்படுத்தினாராம். இதனால சட்டவிரோத செயல்கள்ல ஈடுபட்ட நபர்களும் வேற வேலைய பார்க்க போய்ட்டாங்களாம். இதனால 2 ஸ்டார் காக்கிக்கு வர வேண்டியது வராம நின்னுபோச்சாம்.

இதனால, திரும்பவும் சட்டவிரோத கும்பல்களை தொடர்புகொண்டு, திரும்ப தொழிலை தொடங்குங்க, இல்லன்னா பழைய கேசுக்கு பதில் சொல்ல வேண்டியதிருக்கும்னு மிரட்டி, திரும்பவும் எல்லா இல்லீகல் செயல்களையும் தொடங்க வெச்சிட்டாராம். இப்ப 2 ஸ்டார் காக்கி காட்டுல திரும்பவும் பணமழை பெய்யுதாம். மாவட்ட உயர் காக்கி உண்மை என்னனு விசாரணை நடத்தி நடவடிக்ைக எடுக்கணும்னு, காக்கிகள் வட்டாரத்திலயே புகார் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்குது’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

five × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi