டெல்லி: பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளத்தில் இருந்து மூத்த தலைவர் சாஹித் சித்திக் விலகினார். மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எல்.டி.யில் இருந்து சாஹித் விலகியுள்ளார். ஜனநாயகத்தின் மீதும் அரசியல்சட்ட அமைப்புகள் மீதும் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது என சாஹித் சித்திக் தெரிவித்துள்ளார். நாட்டு நலன், சமுதாய நலன், மக்கள் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு என்.டி.ஏ. கூட்டணி கட்சியிலிருந்து விலகியதாக சாஹித் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளத்தில் இருந்து மூத்த தலைவர் சாஹித் சித்திக் விலகல்
previous post