பாஜகவின் வெறுப்பு அரசியல் காரணமாக மணிப்பூரில் 40 நாட்களாக நிகழ்த்தப்பட்ட வன்முறையில் 100 பேர் உயிரிழப்பு என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவை தோல்வியடையச் செய்துவிட்டு பிரதமர் முற்றிலும் மவுனம் காக்கிறார், அமைதியை நிலைநாட்ட அனைத்து கட்சி குழுவை மணிப்பூருக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.