காரைக்குடி: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாஜக மாவட்ட மகளிரணி தலைவி உள்ளிட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாஜகவினர் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று பாஜக மகளிரணி சார்பில் நடந்த இருசக்கர வாகன பேரணியின்போது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார் கூறப்படுகிறது.