சென்னை : தேவேந்திர குல வேளாளர் மக்களை பாஜக அரசு ஏமாற்றிவிட்டதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை வெளியேற்ற விடுத்த கோரிக்கையை பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்றும் கூட்டணியில் அங்கம் வகித்தபோதும் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தராமல் பாஜக அரசு ஏமாற்றிவிட்டது என்றும் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.