அசாம்: எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற மந்திரத்தை பின்பற்றும் கட்சி பாஜக என்று அசாமின் நல்பாரியில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். 2014ல் நம்பிக்கையையும், 2019ல் உறுதியான உணர்வையும் கொண்டு வந்தேன். 2024ஆம் ஆண்டு உத்தரவாதத்தை கொண்டு வருகிறேன். இது மோடியின் கேரண்டி நாடு முழுவதும் ஒரு புதிய சூழல் நிலவுகிறது, 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமரின் பிறந்தநாள் வந்துள்ளது, அவர் தனது பிறந்தநாளை தனது சொந்த வீட்டில் கொண்டாடும் பாக்கியத்தைப் பெற்றுள்ளார் என்று பிரதமர் பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளார்.