வளசரவாக்கம்: முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (22). இவர், நேற்று முன்தினம் வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்தபோது, பைக் திருடுபோனது தெரிந்தது. புகாரின்பேரில், நொளம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அதில், திருமுல்லைவாயல் தென்றல் நகர் பகுதியை சேர்ந்த கவுதம் (எ) நரி (23) என்பவர், விக்னேஷ் பைக்கை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து பைக்கை பறிமுதல் செய்தனர்.
பைக் திருடன் கைது
previous post