பாட்னா: பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் அடுத்த ஹலிம் சவுக் பகுதியில் வசித்து வந்த 30 வயதுடைய பெண்ணை, அவ்வழியாக காரில் சென்ற சிலர் கடத்திச் சென்றனர். அவர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு அழைத்து சென்று கத்தியால் கொடூரமாக தாக்கினர். பின்னர் 4 பேரும் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து தப்பிய அந்தப் பெண், தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார். தனக்கு நேர்ந்த கொடூரத்தை அப்பகுதியினரிடம் தெரிவித்தார்.
இவ்விவகாரம் குறித்து கிஷன்கஞ்ச் போலீஸ் எஸ்பி சாகர் குமார் கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட ஷேர் சிங் (55), ஆகாஷ் சிங் (27), பிரிஜ்லால் சிங் (30), ஷயாமு சிங் (25) ஆகிய 4 பேரும் உத்தரகாண்டை சேர்ந்தவர்கள். இவர்கள் நாடோடிகளாக ஊர் ஊராக சுற்றித் திரிந்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதனால் அவர்கள் மீது ஐபிசி 363, 366, 376 டி, 506 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டது. தலைமறைவாக இருந்த 4 பேரையும் மால்கோனில் கைது செய்தோம். அவர்களின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்’ என்றார்.