சென்னை: பெங்களூரு காவல்துறையின் போலியான அறிக்கையை தந்து பத்திரப்பதிவு செய்த புகாரில் விஜிபி குழும நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜிபி குழும நிர்வாகி அமலதாஸ் ராஜேஷ் உள்பட 5 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாதவரத்தைச் சேர்ந்த சார் பதிவாளர் கீதா அளித்த புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அசல் ஆவணம் பெங்களூருவில் காணாமல்போனதாக புகார் அளித்து ரசீது பெற்றது போன்று போலி ஆவணம் தயாரித்து மோசடி அரங்கேறியுள்ளது.