சென்னை: பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் வகையில் பாஜக அமைச்சர் ஷோபா பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுகளை இனியும் யாரும் பேசாத வகையில் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்.