பெங்களூரு: இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவு தகவல் கிடைத்தததையடுத்து, கடந்த 9ம் தேதி மகாராஷ்டிராவில் 40 இடங்கள் மற்றும் கர்நாடகாவில் ஒரு இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனை நடத்தினர். இதில், 15 பேர் கைது செய்யப்பட்டனர். பெருமளவில் பணம், ஆயுதங்கள், குற்றவியல் ஆவணங்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனைகளின் தொடர்ச்சியாக பெங்களூரு மாநகரில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல குழுக்களாக பிரிந்த என்ஐஏ அதிகாரிகள் பெங்களூரு மாநகர போலீசார் உதவியுடன் மாநகரின் 6 இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.
பெங்களூருவில் 6 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை
previous post