Wednesday, May 15, 2024
Home » ராம்சீதா பழத்தின் நன்மைகள்!

ராம்சீதா பழத்தின் நன்மைகள்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

*மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளை தாயகமாகக்கொண்ட இப்பழம் இன்று இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தைவான், ஆப்பிரிக்கா நாடுகளில் பயிராகிறது.

*எட்டு மீட்டர் முதல் பத்து மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. மஞ்சள் கலந்த பசுமை நிறப் பூக்கள் காணப்படும்.

*பழமானது மஞ்சள் சாயையுள்ள சிவப்பு நிறமாக, இதய வடிவத்துடன், 7.5 முதல் 12.5. செ.மீ. விட்டத்துடன் இருக்கும். பழச்சதை வெண்மை நிறமுடையது. பழச்சதையில் பல விதைகள் இருக்கும்.

*ஒரு பழம் சுமார் அரைகிலோ எடை கொண்டதாக இருக்கும்.

*ஒரு மரத்தில் 45 கிலோ பழங்கள் ஒரு ஆண்டில் கிடைக்கும். நட்ட இரண்டு ஆண்டுகளில் பழங்களை அறுவடை செய்யலாம்.

*ராம்சீதா பழத்தின் தாவரவியல் பெயர் அனோனா ரெடிகுலேட்டா என்பதாகும். இது அனோனசியே என்ற தாவரக் குடும்பத்தின் கீழ் வருகிறது.

மருத்துவக் குணங்கள்:

*ராம்சீதா பழத்தில் தாதுச்சத்துகள், கொழுப்பு, நார், மாவுப் பொருட்கள் உள்ளன. பழத்தில் அயோடின், புளோபின் உள்ளன. பழம் பழுக்கும் போது அஸ்கார்பிக் அமிலம் அதிகமாகிறது.

*காய், கனி, இலை, பட்டை அனைத்தும் மருத்துவக் குணங்கள் கொண்டது.

*பச்சைக்காயில் அதிக அளவு டானின் சத்து இருப்பதால் வயிற்றுப் போக்கிற்கு மருந்தாகிறது.

*சீதா காயானது மண்ணீரல் வீக்கத்தை தணிக்கும்.பழத்தை அடிக்கடி உண்டு வந்தால் ரத்த விருத்தி ஏற்படும்.

*இப்பழம் வாந்தியை நிறுத்தும்.

*இப்பழத்திற்கு பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு.

*இதயத்தை நன்கு செயல்பட வைக்கும்.

*காய்ச்சலின் போது ஏற்படும், தாகம், களைப்பை நீக்கும்.

*இப்பழம் உண்டு வர பசியைத் தூண்டும்.

*இலைகளை அரைத்து வயிற்றின் மேல் பூசிட அஜீரணம் மாறும்.

*பட்டையில் கசாயம் வைத்து பருக வயிற்றுப்போக்கை நிறுத்தும்.

*காயானது குடலிலுள்ள நாக்குப் பூச்சிகளை அழிக்கும்.

*இந்த ராம் சீதாபழத்தின் முற்றாத கனியிலிருந்து பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் கறுப்புச் சாயம் எடுக்கப்படுகிறது.

*விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்பு தயாரிக்க பயன்படுகிறது.

*இலைகள் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது.

தொகுப்பு: சா.அனந்தகுமார்

You may also like

Leave a Comment

three × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi