டெல்லி: ரூ.24,000 கோடி மதிப்பில் படுக்கை வசதி கொண்ட 80 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. டிடாகர் ரயில் சிஸ்டம்ஸ், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் இணைந்த கூட்டு நிறுவனத்துடன் ரயில்வே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரூ.24,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தின்படி 2029-க்குள் 80 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. வடிவமைப்பு. தயாரிப்பு மட்டுமின்றி ரயில்களின் 35 ஆண்டுகள் பராமரிப்பும் ஒப்பந்தத்தில் அடங்கும்.