சென்னை: வங்கக் கடலில் உருவாகவுள்ள புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டியளித்தார். மண்டல அலுவலர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் களத்திற்குச் செல்ல முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மட்டும் 162 சமுதாயக் கூடங்கள் தயாராக உள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.