சென்னை: சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில் வங்கி ஏ.டி.எம்மில் நூதன முறையில் ரூ. 13 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ரகசிய எண்ணை பயன்படுத்தி கைவரிசை. கடந்த 6-ம் தேதி வங்கி ஏடிஎம்மில் ரூ.23.35 லட்சத்தை ஊழியர்கள் நிரப்பிச் சென்றுள்ளனர். வழக்கமாக ஐந்து நாட்களுக்கு ஒருமுறை சம்பந்தப்பட்ட வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பப்படுவது வழக்கம். ஏடிஎம்மில் பணம் நிரப்பப்பட்ட இரண்டே நாட்களில் பணம் இல்லை என்று குறுஞ்செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.