பெங்களூர்: பெங்களூரு நகரில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக வீட்டில் இருந்தே பணிபுரியவும், ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும் அனுமதிக்குமாறு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக கடும் வறட்சி நிலவுவதால், டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் தண்ணீர் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.