பெங்களூர்: பெங்களூரு ஜே.பி நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் சுகன்யா (48), மகன்கள் நிகித்(28), நிதிஷ் (28) ஆகியோர் உயிரிழந்தனர். தனியார் வங்கியில் வாங்கிய கடனை கேட்டு ஊழியர்கள் தொல்லை செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டனர்.