மதுரை: மராட்டியத்தில் மாடர்ன் பண்டதலூன் விளையாட்டில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர்களின் பட்டியலை அனுப்பக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. நெல்லை தியாகராஜா நகரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் ஆலோசித்து பதில்மனு தாக்கல் செய்ய பள்ளிக்கல்வி இணை இயக்குநருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.