சென்னை: பாலாற்றில் ஆந்திர அரசு புதிய தடுப்பணை கட்டுவதும், ஏற்கெனவே கட்டிய அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 1892ம் ஆண்டு ஒப்பந்தப்படி கடைமடை பாசன மாநில ஒப்புதலின்றி புதிய அணை கட்டக்கூடாது. ஆந்திரத்தில் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டால் தவிர தமிழ்நாட்டிற்கு பாலாற்றில் தண்ணீர் வருவதில்லை. பாலாற்றின் குறுக்கே மேலும் தடுப்பணைகள் கட்டினால், ஆந்திரத்தில் வெள்ளம் ஏற்பட்டால் கூட பாலாற்றில் தண்ணீர் வராது. பாலாற்றை நிரந்தர பாலைவனமாக்க ஆந்திரம் திட்டமிட்டு மேற்கொள்ளும் இந்த சதியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.