முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பா.வளர்மதி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி ரிஷிகேஷ் ராய் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணை பிப். 27 முதல் தொடங்க இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.