சென்னை: சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்த சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் எட்டயபுர மன்னரின் முக்கிய தளபதியாக திகழ்ந்தவர். ஒவ்வொரு வருடமும் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று அழகுமுத்துக்கோனின் 266வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வருடன் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரியகருப்பன், ராஜ கண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பொன்முடி, சேகர்பாபு, சாமிநாதன், எ.வ.வேலு, பெரியசாமி, கீதா ஜீவன், சென்னை மேயர் பிரியா, துணை மேயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.