அயோத்தி: உத்தரப்பிரதேசத்தில் ஜனவரியில் ராமர்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் ஹனுமன் கோயில் மற்றும் ராமர் கோயிலில் வழிபாடு செய்தனர். பின்னர் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 14 முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அனுமதி அளித்தது. வழக்கத்திற்கு மாறாக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.