நாமக்கல்: பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்து வருகிறார். கேரளாவில் பறவைக்காய்ச்சல் காரணமாக நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோழிப் பண்ணைகளை கண்காணிக்க 47 அதிவிரைவு படை அமைக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பண்ணையாளர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.