அறந்தாங்கி,நவ.7: ஆவுடையார்கோவில் அருகே கண்மாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.ஆவுடையார்கோவில் அருகே மின்னாமொழியில் உள்ள கண்மாயில் சடலம் ஒன்று மிதப்பதாக ஆவுடையார்கோவில் போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கண்மாய் தண்ணீரில் மிதந்து சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட சடலம் 45 வயது மதிக்கதக்க ஆண் சடலம் என தெரியவந்தது. அவரை கொலை செய்து கண்மாயில் போட்டு உள்ளனரா? இல்லை தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் ஆவுடையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.