திருச்சி: திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.1.69 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றுமுன்தினம் பயணிகள் விமானம் வந்தது. பயணிகளில் ஆண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதில், உடலில் மறைத்து கடத்தி வந்த 1.06 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.61 லட்சத்து 21 ஆயிரத்து 500 ஆகும். இதேபோல் கணவன், மனைவி, மற்றும் 2 குழந்தைகளிடம் சோதனை நடத்தியதில், குழந்தைகளின் கால் சட்டைக்குள்ளும், காலணிக்குள்ளும் மறைத்து கடத்தி வந்த ஒரு கிலோ 872 கிராம் எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ஒரு கோடியே 8 லட்சத்து 10 ஆயிரத்து 800 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.