ஸ்ரீநகர்: ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாவுதீன். இவரது இரண்டு மகன்களுக்கும் சொந்தமாக காஷ்மீரில் இருந்த சொத்துக்களை என்ஐஏ முடக்கியுள்ளது. முதலில் சலாவுதீனின் மகன் சையத் அகமத் ஷாகீலுக்கு, ராம் பாக் பகுதியில் உள்ள வீட்டை என்ஐஏ அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இதனை தொடர்ந்து பத்காம் மாவட்டத்தில் உள்ள சோய்பாக்கில் விவசாய நிலத்துடன் இருந்த பிளாட்டை என்ஐஏ அதிகாரிகள் முடக்கினார்கள்.