கவுகாத்தி: அசாம், மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. வங்கதேசத்தின் கிழக்கில் உள்ள கோபால்கஞ்ச் என்ற இடத்தில் நேற்று காலை 10.16 மணிக்கு 70 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயாவிலும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.