கோல்பாரா: பாஜ ஆட்சி நடைபெறும் அசாமில் கோல்பாரா மாவட்டத்தின் பாஜ மாவட்டச் செயலாளராக ஜோனாலி நாத் செயல்பட்டு வந்தார். மத்தியா கிராமத்தைச் சேர்ந்த இவரது உடல், காயங்களுடன் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள சல்பாரா பகுதிக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வீசப்பட்டு கிடந்தது. தகவலறிந்து வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் உள்ள காயங்களை பார்த்தால் அவரை மர்மநபர்கள் கடுமையாக தாக்கி, கொலை செய்து சாலையில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.