Sunday, June 2, 2024
Home » இலங்கை கடற்படைக்கு பயந்து வேகமாக வந்ததால் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதல்

இலங்கை கடற்படைக்கு பயந்து வேகமாக வந்ததால் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதல்

by Dhanush Kumar

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். இரவில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அப்பகுதியில் இருந்து விரட்டினர். இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைக்கு பயந்து மீனவர்கள் தங்களது படகுகளை அங்கிருந்து வேறு பகுதிக்கு அவசரமாக ஓட்டிச் சென்றனர். மீனவர்கள் படகுகளை அவசரமாக ஓட்டிச் சென்றதில் முந்திச் செல்ல முயன்றபோது படகுகள் ஒன்றுக்கொன்று மோதியுள்ளது. இதில் ராமேஸ்வரம் மீனவர் மாக்சினின் படகு உட்பட பல படகுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் மீன்பிடித்து நேற்று மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பிய நிலையில் மீன்பாடு குறைவாக இருந்தது. மேலும் சேதமடைந்த படகுகள் கரையில் இருந்து வெகு தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

You may also like

Leave a Comment

15 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi