சென்னை: ஆரியம், திராவிடம் பற்றி பேசி வரலாற்றை அழிக்கத் ஆளுநர் ஆர்.என்.ரவி துடிக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உண்மையான வரலாற்றை அழிப்பதற்கு இங்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உண்மையான வரலாற்றை மறைத்து அதற்கு நிகரான வரலாற்றை எழுத முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் இன ரீதியாக பிரிவினை இருப்பது போன்றதொரு தவறான தகவலை உருவாக்கினார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.