விருதுநகர்: அருப்புக்கோட்டையில் வரிச்சியூர் செல்வத்திடம் 3வது நாளாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டாளியை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வரிச்சியூர் செல்வத்திடம் 3வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. செந்தில்குமாரை கொலை செய்து தாமிரபரணி ஆற்றில் வீசியதாக வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டார். ஜூன் 26ம் தேதி முதல் காவலில் எடுத்து அருப்புக்கோட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.