திருவொற்றியூர்: சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் தெற்கு பகுதி, 27வது வார்டு திமுக சார்பில், கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நேற்று மாலை மாதவரம், பெரிய சேக்காடு, பெருமாள் கோவில் தெருவில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். தெற்கு பகுதி செயலாளர் ஜி.துக்காராம், வட்ட செயலாளர் ராஜா நரசிம்மன் வரவேற்றார். மாதவரம் மண்டல குழு தலைவர் எஸ்.நந்தகோபால் முன்னிலை வகித்தார். 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் எ.சந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மேலும், திமுக மூத்த முன்னோடிகள் 5 பேருக்கு பொற்கிழியும் 1000 பேருக்கு புடவை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் தொகுதி பொறுப்பாளர் சந்திரபாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் மிசா மதிவாணன், மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி கணேசன், மாவட்ட துணை செயலாளர் ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், வை.ம.அருள்தாசன், ஒன்றிய செயலாளர் சரவணன், மாதவரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சி.ஹரிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.