சென்னை: அனைத்து தரப்பினரையும் பாதுகாத்து வரும் அரசுதான் நமது அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைப்பதாகவும் தெரிவித்தார். திட்டங்களுக்கான செலவினங்களை எதிர்கால தலைமுறை வளர்ச்சிக்கான முதலீடுகளாக பார்க்கிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் உதவித் தொகையை வழங்கவில்லை; உரிமையை வழங்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.