ஆவடி: சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆவடி காவல் ஆய்வாளர் டில்லி பாபு தலைமையில் போலீசார் சேக்காடு ஆஞ்சநேயர் கோவில் அருகே, நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் 2 பேர் கோணி மூட்டையுடன் வந்தனர். அவர்களை நிறுத்தி மூட்டையை சோதனை செய்தனர். அதில் 4 கிலோ கஞ்சா இருந்ததைக் கண்டு அவர்கள் இருவரையும் பிடித்து ஆவடி காவல் நிலையம் கொண்டுவந்தனர்.
விசாரணையில் திருநின்றவூரைச் சேர்ந்த சீனிவாசன்(35), சந்தோஷ்(33) என்பது தெரியவந்தது. அவர்கள் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து திருநின்றவூர் பகுதியில் விற்பது தெரியவந்தது. இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவுசெய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.