சென்னை: ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் திரும்பிச் செல்வதால் பனையூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை அடுத்து ரசிகர்கள் திரும்பிச் செல்கின்றனர். ரசிகர்கள் வாகனங்களில் திரும்பிச் செல்வதால் ஈ.சி.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.