Thursday, May 16, 2024
Home » குப்பை கொட்டுவதில் தகராறு; கல்லூரி மாணவன் உட்பட 2 பேருக்கு கத்தி குத்து: முதியவரை கைது ெசய்து போலீஸ் விசாரணை

குப்பை கொட்டுவதில் தகராறு; கல்லூரி மாணவன் உட்பட 2 பேருக்கு கத்தி குத்து: முதியவரை கைது ெசய்து போலீஸ் விசாரணை

by MuthuKumar

சென்னை: சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் வரதன் பாபு(20). கல்லூரி மாணவனான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கலைமணி(63) என்பவருக்கும் இடையே குப்பை கொட்டுவதில் தகராறு இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று மாலை மீண்டும் குப்பை கொட்டுவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது, ஆத்திரமடைந்த கலைமணி கையில் வைத்திருந்த கத்தியால் கல்லூரி மாணவன் வரதன்பாபுவை சரமாரியாக குத்தினார். இதை பார்த்த அவரது நண்பர் சஞ்சய்(26) என்பவர் அதை தடுக்க முயன்றார்.

இதில் சஞ்சயையும், முதியவர் கத்தியால் குத்தினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த கல்லூரி மாணவன் உட்பட 2 பேரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து கல்லூரி மாணவன் வரதன் பாபு மற்றும் சஞ்சய் ஆகியோர் கொடுத்த புகாரின் படி, போலீசார் முதியவர் கலைமணி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi