400 கிராம் அவல்
150 கிராம் பெரிய வெங்காயம்
4 பச்சை மிளகாய்
2 டேபிள் ஸ்பூன் இஞ்சி
1/2 கப் நிலக்கடலை (வேக வைத்தது)
1/4 கப் தேங்காய் துருவல்
1/4 டீஸ்பூன் கடுகு
1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு,
உளுந்தம் பருப்பு
1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையானஅளவு உப்பு
4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
சிறிதளவு கறிவேப்பிலை
சிறிதளவு கொத்துமல்லித் தழை
1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு.
செய்முறை
முதலில் அவலைக் கழுவி தேவையான அளவு உப்பு சேர்த்து அவல் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 – 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். அதன்பின், வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க வறுத்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நிலக்கடலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் இதனுடன் ஊறிய அவலைச் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, எலுமிச்சைச் சாறு சேர்த்து கொத்துமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையும், ஆரோக்கியமும் மிகுந்த நிலக்கடலை அவல் உப்புமா தயார்.