Monday, May 20, 2024
Home » அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சென்னை வாலிபர் ஓடஓட சரமாரி வெட்டிக்கொலை

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சென்னை வாலிபர் ஓடஓட சரமாரி வெட்டிக்கொலை

by Mahaprabhu

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிராங்க்ளின் (26). இவர், கடந்த ஒரு மாதமாக ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஏபிஎம் சர்ச் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பிராங்க்ளின் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், இவரை வழிமறித்து, கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதனால், அதிர்ச்சியடைந்த பிராங்க்ளின், அந்த கும்பலிடம் இருந்து தப்பியோடினார். ஆனால், அந்த கும்பல் விடாமல் விரட்டிச்சென்று பிராங்க்ளினை ஓட ஓட வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.

இதில், படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனே அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்ேபரில், இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிராங்க்ளினை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, பரிசோதித்த டாக்டர்கள் பிராங்க்ளின் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த ராணிப்பேட்டை எஸ்பி கிரண் ஸ்ருதி, அரக்கோணம் ஏஎஸ்பி அசோக் கிரீஸ் யாதவ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4 தனிப்படை அமைத்து எஸ்பி உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படையினர் சம்பவம் நடந்த பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை நேற்று ஆய்வு செய்தனர். மேலும், ஒரு தனிப்படையினர் பிராங்க்ளின் பின்னணி குறித்து விசாரணை நடத்த சென்னை விரைந்துள்ளனர். கொலையாளிகளை பிடித்த பின்னரே பிராங்க்ளின் எதற்காக வெட்டிக்கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

nine − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi