சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 50% தேர்வு கட்டண உயர்வு முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். இந்த செமஸ்டரில் பழைய கட்டண நடைமுறையே பின்பற்றப்படும். கூடுதலாக தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்ட கல்லூரிகளில் மாணவர்களுக்கு திருப்பி தர உத்தரவிடப்பட்டுள்ளது.