சென்னை: அண்ணாமலை விவகாரத்தில் பாஜக தலைமை முடிவெடுக்காவிட்டால் கூட்டணி பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறப்படுகிறது. அண்ணாமலை விவகாரத்தில் ஓரிரு நாட்களில் பாஜக தலைமை முடிவெடுக்கும் என நம்புவோம் என்றும் எடப்பாடி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதம் நடத்தி வருகின்றனர்.